மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் தமிழாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட்செய்து பதிவிட்டுள்ளார். 


” புதிய சீர்திருத்தங்களின் இருக்கும் குழப்பங்களை நீக்க வேண்டியது, நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சரின் கடமை , இந்தச் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் தவறான மாயையை உருவாக்கியுள்ளன. 


இந்த புதிய சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைகளின் அடிப்படையில் அரசு செய்திருக்கும் கொள்முதல்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை அளவாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதில் அரசு புதிய சாதனை படைத்திருக்கும் சமயத்தில், கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை(எம்.எஸ்.பி) நடைமுறை கைவிடப்படும் என்று விவசாயிகளிடம் சிலர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உற்பத்திச் செலவைக் காட்டிலும் 1.5 மடங்கு அளவுக்கு எம்.எஸ்.பி விலையை அரசு உயர்த்தியுள்ளது. 


பயிர்களுக்கு மட்டும்தான் ஒப்பந்தமே தவிர, நிலத்துக்கு அல்ல. வேற எந்த ஒப்பந்தமும் நிலத்தின் மீது கிடையாது. விவசாயிகளின் நிலம் முழு பாதுகாப்புடன் இருக்கும்.

விளைபொருளுக்கான கொள்முதல் விலை, வேளாண்மை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏ.பி.எம்.சி மண்டிகள் தொடர்ந்து செயல்படும். ஏ.பி.எம்.சி மண்டிகள் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை. 


கொண்டு வரப்பட்ட சட்டங்கள் புதியது கிடையாது. ஏற்கனவே பல மாநிலங்கள் ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி அளித்துள்ள. ஒப்பந்த வேளாண்மை குறித்து பல மாநிலங்களில் சட்டங்களும் உள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் மற்றும் நில உரிமை தொடர்பான அனைத்து சந்தேகங்களையும், குழப்பங்களையும் தெளிவுபடுத்த அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்துவருகிறது. 


யாரும் சட்டவிரோதமாக நிலத்தைக் கையகப்படுத்த முடியாது. ஏனெனில், விவசாய நிலப் பயன்பாட்டு உரிமையில் மாற்றம், விற்பனை, குத்தகைகள் மற்றும் அடமானம் வைக்கும் எந்த அம்சமும் இந்தச் சட்டத்தில் இல்லை.


குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க அரசு தயாராக உள்ளது. வேளாண்மை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை அளிக்கப்படும். விவசாயிகளின் நிலத்தில் நிரந்தரமான எந்த மாற்றத்தையும் ஒப்பந்ததாரர்கள் செய்ய முடியாது. விவசாயிகளின் நிலத்தில் தற்காலிககக் கட்டுமானம் எதுவும் மேற்கொள்ள ஒப்பந்ததாருக்கு கடன் தரப்படாது.


 விவசாயிகள் என்ற போர்வையில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் உருவாக்கியுள்ள குழப்பமான சூழ்நிலையையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று இந்தக் கடிதத்தின் மூலம் உங்களை நான் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.