மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இவர் தலைமையில் மிட்னாப்பூரில் பிரமாண்ட பேரணி பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியின்போது இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்தனர். அத்துடன், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்,பி மற்றும் ஒரு முன்னாள் எம்.பியும் பாஜகவில் இணைந்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர்.

 

திரிணாமுல் கட்சியில் தலைவர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியில் இருந்து வெளியேறும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த நிலையில், இந்த இணைப்பு நடந்துள்ளது. 
அமித் ஷா இன்று பேரணியில் பேசும்போது, “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்தி வரும், காட்டாட்சியை மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது.


பாஜக, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்துச் செல்கிறது என்று மம்தா தீதி கூறுகிறார். காங்கிரஸில் மம்தா இருந்த நாட்களை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பூர்வீகம் காங்கிரஸ்தான். நீங்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி டி.எம்.சி.யை உருவாக்கியபோது நீங்களும் இதையே செய்தீர்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகிறாரகள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்கள் மற்றும் சலுகைகள் மேற்கு வங்க மக்களுக்கு கிடைக்கவில்லை.

பேரணியின் போது அமித் ஷா,’’ மேறகு வங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் ஆட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். சட்டம் ஒழுங்கு சீர்த்துவிட்டது. மம்தாவின் பூர்வீகம் காங்கிரஸ் தான் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். காங்கிரஸில் அவர் இருந்த நாட்களை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி டி.எம்.சி.யை உருவாக்கியபோது நீங்களும் இதையே செய்தீர்கள். 

பிரதமர் மோடியால் அனுப்பபடும் 6000 ரூபாய் உதவித்தொகை விவசாயிகளுக்கு கிடைக்க விடாமல் மம்தா ஏன் செய்துக்கொண்டு இருக்கிறார். ஏழைகளுக்கு அனுப்பிய தானியங்கள், சலுகைகளை எல்லாம் மம்தா அரசு ஏன் பதுக்கி வைத்துக்கொள்கிறது.  

மம்தா ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை. மம்தா பானர்ஜி குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். மம்தா தனது மருமகனுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டுமே கொடுக்க விரும்புகிறார். அவர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை. மேற்கு வங்கத்தின் அனைத்து பிரச்னைகளையும் மோடி ஜி தலைமையில் பாஜக அரசால் தீர்க்க முடியும்.


கம்யூனிஸ்களுக்கு 27 ஆண்டுகள், காங்கிரஸுக்கு 3 தசாப்தங்கள் மம்தாக்கு 10 ஆண்டுகள் கொடுத்து உள்ளீர்கள். பாஜகாவுக்கு 5 ஆண்டுகள் மட்டும் கொடுத்துப் பாருங்கள். பெங்காலை சோனார் பங்களாவை உருவாக்குவோம். 


தேர்தலின் போது மம்தா மட்டும் அவர் கட்சியில் இருப்பார். எல்லாரும் பாஜகவுக்கு வந்து விடுவார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக தனது பலத்தை உணர்த்தியுள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும். “ என்று பேசி இருக்கிறார்.