டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ,  பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரி பிரேந்தர் சிங் களமிறங்கியிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரி பிரேந்தர் சிங், ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சம்ப்லாவில், ‘’ அனைவரின் கிளர்ச்சி" என்று கூறி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும், ஹரியானா மாநிலத்தின் பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் பிரேந்தர் சிங், தற்போது மத்திய பா.ஜ.க நிர்வாக குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

பாஜகவில் இருந்துகொண்டே விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது பற்றி பிரேந்தர் சிங் கூறியிருப்பது , ‘’ சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, எனது மகன் அரசியலில் இறங்கினால் நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தேன். அதுதான் எனது முடிவு. இப்போது நான் எந்த அரசியலையும் செய்ய விரும்பினால் அது விவசாயிகளுக்காக மட்டுமே இருக்கும். விவசாயத் தலைவர் சி சோட்டு ராமின் பேரன் என்னும் முறையில் விவசாயிகளுடன் நிற்பது எனது தார்மீகப் பொறுப்பும் கடமையும் ஆகும்.


விவசாயிகளின் கோரிக்கைகளை நியாயமானது. விவசாயிகளின் பிரச்னைகளை எழுப்புவது கட்சி விரோத நடவடிக்கை அல்ல. கட்சியில் நீடிக்கும் போதும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பேன். முதலில் விவசாயிகளுக்குதான் முன்னுரிமை. அதன்பிறகே கட்சி. இது ஒரு தீர்க்கமான போர்.


 வேளாண் சீர்திருத்தங்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சர் சோட்டு ராமின் பேரன் நான். என்னால் விவசாயிகள் கஷ்டப்படுவதை பார்த்து சும்மா இருக்க முடியாது. அதனால்தான் தர்ணா போராட்டத்தில் இறங்கி இருக்கிறேன். 


எல்லோரும் விவசாயிகளின் இந்த கிளர்ச்சியைப் பற்றி கவலைப்படுகிறார்கள் ஆனால் நான் ஒரு தீர்வை விரும்புகிறார்கள். கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  நிலைமைக்கு தீர்வு காண ஒரே வழி பேச்சுவார்த்தை. ஆனால் அது முடிவானதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.