தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு போதும் ஆட்சி அமைக்காது என கூறிய ராகுல் காந்திக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

rahulgandhi

நேற்று மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது.

நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்று ஆவேசமாக பேசியிருந்தார். மேலும் மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த நிலையில் மக்களவையில் தமிழகம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பலமுறை பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு ராகுல் காந்தி 'நானும் ஒரு தமிழன் தான்' என்று பதிலளித்தார். மக்களவையில் ஜனாதிபதி  உரை மீதான விவாதத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசும் பொழுது, “இந்தியா என்பது மாநிலங்களுடன் இணைந்த ஒன்றியம் ஆகும். 

இந்நிலையில் நடிகையும் பா.ஜ.க தலைவருமான குஷ்பு சுந்தர் ராகுல் காந்தியின் பேச்சிற்கு தனது பதிலடியை கொடுத்துள்ளார். இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்த மனிதன் எப்போது கற்றுக்கொள்வார்? ப்ளீஸ் உங்கள் உண்மைகளை சரியாகப் பாருங்கள் ராகுல் காந்தி ஜி. புதுச்சேரியில் பாஜக அரசு உள்ளது. அதாவது தமிழர்கள் எங்களை நம்பியுள்ளனர். தயவு செய்து வளருங்கள், நீங்கள் பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தடுமாறுவதைப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது" என தெரிவித்துள்ளார்.