உயிரியல் பூங்காவில் சிங்கத்தைச் சீண்டிப் பார்த்த நபரை, சிங்கம் கையை கடித்து குதறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செனிகல் குடியரசு (Republic of Senegal) நாட்டில் உள்ள ஹென் உயிரியல் பூங்காவில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை பிடித்து கூண்டில் அடைத்தாலும், அதன் தன்மை, சீற்றம், வீரம் எல்லாம் குறைந்து விடுமா என்ன?” அப்படித் தான், கூண்டிற்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபரின் கையை, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு சிங்கம் கடித்து குதறிய சம்பவம், தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது, சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான பல்வேறு வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ ஒன்றும் நேற்று முதல் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், “ஒரு உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிங்கத்தை, அங்கு சுற்றுப் பார்க்க வந்த ஒரு நபர், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிங்கத்தின் அருகில் சென்று, அந்த சிங்கத்தை சீண்டும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது, அந்த நபர், சற்றும் யோசிக்காமல் கூண்டின் அருகில் வந்து நிற்கிறார். அப்போது, அந்த கூட்டில் இருந்த சிங்கமும் அந்த மனிதரின் அருகில் வந்து நிற்கிறது.

அப்போது, கூட்டிற்கு வெளியே நின்றிருந்த அந்த நபர், நேரடியாக கூண்டில் கையை நுழைக்க முற்பட்டார். இதனை ஒரு நொடிக்கூட தாமதிக்காத அந்த சிங்கம், அந்த நபரின் கையை அந்த சிங்கம் அப்படியே கவ்விக்கொண்டது.

இதனால், வலியால் துடித்த அந்த நபர், சத்தம் போட்டு கத்தவே, அந்த கூட்டிற்கு வெளியே அனுமதிக்கப்பட்ட இடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்த பொது மக்கள், தங்களது கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து அந்த சிங்கத்தின் மீது எரிந்தனர். 

ஆனாலும், அந்த சிங்கம், அந்த நபரின் கையை விடுவதாக இல்லை. இதனால், அந்த நபர் அலறித் துடிக்கிறார்.

சிங்கத்தை சீண்ட நினைத்த நபர், தனது கைகளை மீட்க முடிந்த வரை முயற்சி செய்து பார்க்கிறார். அத்துடன், அந்த நபர் சிங்கம் கையை கடித்துக்கொண்டு இருக்கும் வலியை தாங்க முடியாமல், அந்த கூண்டின் கம்பியின் அருகே நகர்கிறார்.

அப்போது, அடுத்த சில நொடிகளில் அந்த சிங்கம், அந்த நபரின் கையை சட்டென்று விடுவித்து உள்ளது. ஆனாலும், அந்த நபரின் கையில் இருந்து ரத்தம் சொட்டுகிறது.

இப்படியாக, அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோவை, அந்நாட்டின் ஊடகமான எவ்ரிதிங் இன் ரியல் லைஃப் டிவி ஒளிப்பரப்பு செய்து உள்ளது. இதனை, பலரும் இணையத்தில் பகிர்ந்து வருவதால், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து பலரும் கடும் அதிர்ச்சியடைந்த வரும் நிலையில், பலரும் இணையத்தில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.