2 மனைவிகளை விட்டு விட்டு போலீஸ்காரர் ஒருவர், 3 வது பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் முத்துராஜா பாளையத்தைச் சேர்ந்த 33 வயதான நவீன் என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டு பட்டாலியன் காவலர் பிரிவில் பணியில் சேர்ந்தார் ஆவர்.

இவர், தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு முதன் முறையாக இருவீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, போலீஸ்காரர் நவீனுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. முதல் மனைவி, தனது இரு குழந்தைகளுடன் நவீனின் பெற்றோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல், மற்றொரு பெண்ணை காதலித்து அவரை போலீஸ்காரர் நவீன் 2 வதாக ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின், முசிறி காவலர் குடியிருப்பில் அவரை தங்க வைத்த குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் போலீஸ்காரர் நவீன். இந்த 2 மனைவிக்கும் 2 குழந்தைகள் பிறந்தன.

இப்படியான சூழலில் தான், சிறுகனூர் போலீஸ் நிலையத்துக்கு 2 ம் நிலை போலீஸ்காரராக நவீன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அப்போது, அந்த பகுதியில் 3 வதாக ஒரு பெண்ணுடன் போலீஸ்காரர் நவீன் கள்ள உறவில் தொடர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, போலீஸ்காரர் நவீன் தனது 2 வது மனைவியின் வீட்டுக்கு செல்லாமல், அந்த கள்ளக் காதலியுடன் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், போலீஸ்காரர் நவீன் மீது சந்தேகம் அடைந்த அவரது 2 வது மனைவி, நவீன் பற்றி விசாரித்து உள்ளார். அப்போது, போலீஸ்காரர் நவீன், 3 வதாக ஒரு பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பது, அந்த 2 வது மனைவிக்குத் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த நவீனின் 2 வது மனைவி, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் தனது போலீஸ்கார கணவன் நவீன் பற்றி புகார் அளித்திருக்கிறார்.

இது புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறை உயர் அதிகாரிகள், இது பற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன் படி, போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் விசாரணை நடத்திய நிலையில், “போலீஸ்காரர் நவீன், முதல் மனைவிக்குத் தெரியாமல் 2 திருமணம் செய்து இருப்பதும், தற்போது 2 வது மனைவிக்குத் தெரியாமல் 3 வதாக ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, குற்றம் உறுதி செய்யப்பட்டதால், போலீஸ்காரர் நவீன் அதிரடியாக தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம், தமிழக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.