காதலியின் மகளை அடைய முயன்ற கள்ளக் காதலனை, கள்ளக் காதலியே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா என்பவர், அங்கள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். 

இந்த சித்தப்பாவுக்கு திருமணமாகி தற்போது குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கிராமமான நவதகி கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் சித்தப்பா நிர்வாணமான நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது குறித்து வரைந்து வந்த கமலாபுரா போலீசார், சித்தப்பா உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

அத்துடன், “தற்கொலை செய்துகொள்ளும் நபர், நிர்வாண நிலையில் இருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் சித்தப்பா நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியதால், அவர் தற்கொலை செய்யவில்லை என்றும், யாரோர் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம்” என்றும், போலீசாருக்கு சந்தேகம் வந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், சித்தப்பாவை கொலை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த அனுசியா என்ற பெண்ணையும், அவரது கள்ளக் காதலன் சிவக்குமார் மற்றும் கோவிந்த் ஆகிய 3 பேரையும் கமலாபுரா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், “அனுசியாவின் கணவர் இறந்து விட்ட நிலையில்,  அதன் பின், சித்தப்பாவுக்கும் - அனுசியாவுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். 

இந்த சூழலில் தான், அனுசியாவின் மகளையும் சித்தப்பா அடைய துடித்திருக்கிறார். 

அதே நேரத்தில், கள்ளக் காதலி அனுசியாவின் மகளுக்கு, கள்ளக் காதலன் சித்தப்பா தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அனுசியா தனது காதலன் சித்தப்பாவுடன் சண்டைப்போட்டு அவரடன் பழகுவதை தவிர்த்து வந்திருக்கிறார் அனுசியா. 

அதே நேரத்தில், அனுசியாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிவக்குமாருடன் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

எனினும், இது பற்றிய கவலைப்பாடத சித்தப்பா, அனுசியாவின் மகளை அடைய தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கள்ளக் காதலி அனுசியா, தனது மற்றொரு கள்ளக் காதலனான சிவக்குமாருடன் சேர்ந்து சித்தப்பாவை கொலை செய்ய சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்து உள்ளார். 

அதன்படி, திட்டமிட்ட அனுசியா, அங்கள்ள ஒரு “தோட்டத்திற்கு உல்லாசம் அனுபவிக்க வரும்படி, சித்தப்பாவை” அனுசியா அழைத்திருக்கிறார். 

அதன்படி, சித்தப்பாவும் அங்கு சென்ற நிலையில், 2 பேரும் அங்கு உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த சிவக்குமார் இரும்பு கம்பியால் சித்தப்பாவின் தலையில் பலமாக தாக்கி, அவரை அங்கேயே கொடூரமாகத் தாக்கி கொலை செய்து உள்ளார்.

இதனையடுத்து, அவரின் சித்தப்பாவின் உடலை உடலை நிர்வாணமாக்கி அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகே உள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கின்றனர். 

மேலும், இந்த கொலைக்கு அனுசியாவுக்கும், சிவக்குமாருக்கும் கோவிந்த் என்பவர், தேவையான உதவிகளை செய்து கொடுத்ததும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, இவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.