வேறு சில ஆண்களுடன் கள்ளக் காதல் உறவில் இருந்ததை கண்டித்த ஒரு கள்ளக் காதலனை, காதலியே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நாகமல்லேஸ்வரி என்ற பெண், திருமணமான நிலையில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

அப்போது, திருமணம் ஆன அடுத்த சில நாட்களிலேயே நாகமல்லேஸ்வரியின் கணவருக்கு திடீரென்று உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, வேறு வழியில்லாமல் தனியாகத் தவித்து வந்த நாகமல்லேஸ்வரி, தனது உறிவர் வீட்டில் தங்கி இருந்தார்.

பின்னர், தனது வறுமை காரணமாக அங்குள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். 

அப்போது, கடப்பாவைச் சேர்ந்த லாரி க்ளீனரான பாஷா என்பவர், தனது வீட்டைவிட்டு வெளியேறி குண்டூர் பகுதிக்கு வந்திருக்கிறார்.

அப்போது, கொரோனா பொது முடக்கம் காலம் என்பதால் அவரும் வேலை தேடி அழைந்துள்ளார். அந்த நேரத்தில், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஓட்டலில் அவருக்கு வேலை கிடைத்து உள்ளது. 

அந்த நேரத்தில் தான், புதிதாக வேலைக்கு சேர்ந்த பாஷாவுக்கும், அங்கு ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்த நாகமல்லேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கிய நிலையில், போக போக  நாகமல்லேஸ்வரியும் சுய ரூபம் பாஷாவுக்கு தெரிய வந்திருக்கிறது. 

அதாவது, அந்த பெண் அந்த பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பேருடன் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்திருக்கிறார். 

இதனால், பாஷா அந்த பெண்ணை கடுமையாகக் கொடுமைப்படுத்தத் தொடங்கி இருக்கிறார். 

கள்ளக் காதலன் பாஷாவின் கண்டிப்பால் கடும் ஆத்திரமடைந்த காதலி நாகமல்லேஸ்வரி, தனது உல்லாச வாழ்க்கைக்கு  பாஷா இடையூறாக இருப்பதாக நினைத்து, தனது மற்ற 2 கள்ளக் காதலர்களான அமரையா மற்றும் சுப்பாராவ் ஆகியோரிடம் இது பற்றி கூறி அவர்களின் உதவியுடன் பாஷாவை குடிபோதையில் தள்ளாட வைத்து, அவரை 3 பேருமாக சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர்.

பின்னர், பாஷா இறந்து கிடப்பதைப் பார்த்த அந்த பகுதி மக்கள், அங்குள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணையில், கள்ளக் காதலி நாகமல்லேஸ்வரி தலைமறைவானதையடுத்து போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்திருக்கிறது.

இதனையடுத்து, அவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரை போலுீசார் அதிரடியாகக் கைது செய்த விசாரித்த நிலையில், அவர் காதலன் பாஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்தில் சம்மந்தப்பட்ட நாகமல்லேஸ்வரியின் மற்ற 2 கள்ளக் காதலனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.