12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், ஒரு இளைஞருக்காக சண்டையிட்டு கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி பருவத்தில் காதல் வயப்படுவது இயல்பு தான். அப்போது ''நான் பார்க்கும் பெண்ணை நீ ஏன் பாக்கிறாய்'' என்று இரண்டு மாணவர்கள் விளையாட்டுக்கு சண்டையிட்டு கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.

ஆனால் ஒரு இளைஞருக்காக இரண்டு பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்ளும் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் இரண்டு பேர் வெவ்வேறு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

school girl fightஇதில் ஒரு மாணவி நேற்று ஆர்.டி.சி. பேருந்து நிலையம் அருகே காதலனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு மாணவி அந்த மாணவியுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். 

இரு பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அங்கிருந்த மக்கள் பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென அவர்கள் மாறிமாறி தாங்கிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

நடுரோடு என்றும் கூட பாராமல் இரு மாணவிகளும் கடுமையாக சத்தம் போட்டு ஒருவரையொருவர் சரமாரியாக அடித்துக்கொண்டனர். சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் அதனை சட்டை செய்யாமல் குடிமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். 

இதனை பார்த்து அங்கு கூடியவர்களுக்கு இந்த சண்டையை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லை. ''சண்டையை நிறுத்துங்கள்'' என்று ஒரு சிலர் கூறி பார்த்தும் இரு மாணவிகளும் கண்டு கொள்வதாக இல்லை.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து கொண்டிருக்க, சம்பவம் அறிந்து வந்த போலீசார் இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாக்கிக்கொண்ட மாணவிகள் இருவரும் ஒரே இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை உரிமை கொண்டாடி இருவரும் பொது இடத்தில் முடியை பிடித்து தாக்கிக்கொண்டதும் தெரிய வந்தது.

school girl fight videoஅதனை அடுத்து மாணவிகளின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவிகளை எச்சரித்து போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அந்த இளைஞரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இளைஞருக்காக பள்ளி மாணவிகள் அடித்து தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.