ராஜஸ்தான் மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட கழுதைகள் திருடப்பட்ட சம்பவம் தற்போது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

நீதித்துறையும், காவல்துறையும் பல விநோதமான வழக்குக்களை கையாளுவது உலகம் முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இந்த சம்பவங்கள் சில சமயங்களில் நம்மை சிந்திக்க வைக்கும். சில நேரங்களில் சிரிப்பையும் வரவழைக்கும். 

இதேபோல் காவல்துறையினருக்கு அவ்வப்போது வரும் விநோத புகார்களால் சில சமயங்களில் பெரும் சோதனைகள் நிகழ்வதுண்டு. பென்சில் திருடிவிட்டான், பேனா திருடிவிட்டான் போன்ற பல வேடிக்கையான புகார்களும் வருவதுண்டு. 

donket theft rajasthan stateஅண்மையில் கூட கர்நாடகா மாநிலம் சிவமெக்கா மாவட்டத்தின் சாலிக்ராம் பகுதியை சேர்ந்த ராமையா என்கிற விவசாயி, தங்கள் வீட்டில் வளர்த்து வரும் பசு மாடு தான் கறந்தால் மட்டும் பால் தராமல் தனது மனைவி கறந்தால் மட்டும் பால் கொடுக்கிறது என போலீசில் வேதனையுடன் விவசாயி புகாரளித்திருந்தார்.

இதனை கேட்ட காவலர்கள் ஒருவழியாக விவசாயி ராமையாவை சமாதானம் செய்து அவரது வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நகைச்சுவையை ஏற்படுத்தியது.  இதே போல சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் தனது எருமை மாடு பால் கறக்கவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுமட்டுமின்றி ஆடு திருடி போகிறது என்று சிலர் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது உண்டு. இதேபோல் ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  ஹனுமன்கர் மாவட்டத்தில்  கால்வாய் பகுதிகளில் மண் மற்றும் பொருள்களை சுமக்க கழுதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. 

இதனால் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மெகா கழுதை கண்காட்சியை நடத்தும் அளவிற்கு பாரம்பரியம் கொண்ட 23,000 கழுதைகள் உள்ளன. அவை பெரும்பாலும் செங்கல் சூளைகளில் செங்கல் கொண்டு செல்லவும் சக்கர வண்டிகளை இழுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஹனுமன்கர் மாவட்டத்தில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வெவ்வேறு இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள  70-க்கும் மேற்பட்ட கழுதைகளைக் காணவில்லை .

ஒவ்வொரு கழுதயின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் என்று கூறி குய்யன் காவல் நிலையத்தில் கழுதைகளின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் முதலில் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கழுதை உரிமையாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து போலீஸ் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

donkey theftஇதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கழுதைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டது.  15 கழுதைகளைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க  கழுதைகளை நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தி உள்ளனர் கழுதைகளின் உரிமையாளர்கள். 

அவ்வாறு ஒப்படைக்கும்போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உரிமையாளர்கள் தங்களுடைய கழுதைகளை பிங்கு, பபுலு, பிண்டு, காலு என்று பெயர் சொல்லி கழுதைகளின் உரிமையாளர்கள் அழைத்திருக்கின்றனர். 

அதற்கு எந்தக் கழுதைகளும் மறுமொழி தெரிவிக்கவில்லை. இதையடுத்து 'இவை எங்களுடைய கழுதைகள் அல்ல' என்று கூறி கழுதை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். 

உரிமையாளர்கள், தங்கள் கழுதைகளுக்கு பெயர் வைத்து அழைத்து பழக்கப்படுத்தியுள்ளது காவல்துறையினருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் காணாமல் போன கழுதைகளைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. 

உரிமையாளர்களின் அலட்சியத்தாலேயே கழுதைகள் காணாமல் போயுள்ளதாகவும், கழுதைகள் ஒரேமாதிரி இருப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மறுபுறம், கழுதைகள் காணாமல் போனதால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கழுதைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
'தங்களுடைய கழுதைகள்தான் வேண்டும், வேறு கழுதைகள் வேண்டாம்' என்றும் 'கழுதைகள் கிடைக்கவில்லை என்றால் பெரும் போராட்டம் நடக்கும்' என்றும்  உரிமையாளர்கள் எச்சரித்துள்ளது காவல்துறைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காணாமல் போன கழுதைகளைக் கண்டுபிடிக்க காவல்துறை 5 பேர் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.