திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, அதே வகுப்பைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவையை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த மாணவி, அங்கள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

அதே நேரத்தில், இந்த மாணவியின் வீடு இருக்கும் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், அந்த மாணவியுடன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக பழகி வந்தனர்.

அத்துடன், இந்த மாணவியின் பெற்றோர் பகலில் வேலைக்கு சென்ற நிலையில், அந்த மாணவி மட்டும் தனியாக இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், கடந்த நவம்பர் மாதம் தனது சக பள்ளி நண்பனின் வீட்டிற்கு புத்தகம் வாங்குவதற்காக அந்த மாணவி சென்று உள்ளார். அப்போது அந்த மாணவனின் பெற்றோரும் வேலைக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவன், இந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் இதே போல், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் அந்த மாணவனின் வீட்டிற்கு அந்த மாணவி சென்ற போது, அன்றும் அவரது வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் அந்த மாணவியை, அந்த மாணவன் ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த மாணவி கர்ப்பமடைந்து உள்ளார். இதனால், அந்த 11 ஆம் வகுப்பு மாணவி, கடந்த ஒரு வாரமாக வாந்தி எடுத்து கொண்டிருப்பதால், அந்த சிறுமியின் தாயார் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர், “சிறுமி கர்ப்பமாக இருப்பதாக” கூறியுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது, அந்த மாணவியும் நடந்த விசயத்தை கூறியிருக்கிறார்.

இதனைடுத்து, “பள்ளி மாணவி என்றும் பார்க்காமல், திருமண ஆசை காட்டி உடலுறவு வைத்துக் கொண்டு கர்ப்பமாக்கிய பள்ளி மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து “பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை” கூறி, ஏமாற்றிய பலாத்காரம் செய்த சக பள்ளி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மாணவனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.