பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் மற்றும் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

rajini

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது: எனது மிகவும் மரியாதைக்குரிய மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி எனது பிறந்தநாளில் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் என்னுடைய  பிறந்த நாளன்று  என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய  என் அருமை நண்பர் மாண்புமிகு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என் பிறந்த நாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில கவர்னர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன், திருநாவுகரசர், டி.கே.ரங்கராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான், தினகரன், சசிகலா அவர்களுக்கும் மற்றும் பிற பல மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, அமிதாப் பச்சன், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் ஐயர், மற்றும் பல பிரபலங்களுக்கும் திரை உலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  என் நலனுக்காக கோவில்களில் பூஜைகளும், ஹோமங்களும், அன்னதானங்களும் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிவிட்டர் பதிவில் நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார்.