உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சர்வைவர் நிகழ்ச்சி தற்போது தமிழிலும்  வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது. சர்வைவர் தமிழ் ,நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்க, ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் இந்திரஜா,லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி,பெசன்ட் நகர் ரவி,அம்ஜத்கான், நந்தா,லக்கி நாராயணன்,ஐஸ்வர்யா,சரண் சக்தி,விக்ராந்த்,விஜயலக்ஷ்மி,ராம்,உமாபதி ராமையா,லேடி காஷ்,காயத்ரி ரெட்டி,VJ பார்வதி,ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

மேலும் நடிகர் இனிகோ பிரபாகரன் மற்றும் பிரபல மாடல் வனேசா க்ரூஸ் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சர்வைவரில் இணைந்தனர். போட்டியாளர்களுக்குள் காடர்கள் , வேடர்கள் & கொகம்பர்கள் என அணிகளாக பல கட்டங்களில் பல சவாலான டாஸ்க்குகள் நடைபெற்றன. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. 

மிக மிக கடினமான டாஸ்குகளை கடந்து சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்குள், விஜயலக்ஷ்மி,உமாபதி ராமையா,சரண் சக்தி,வனேசா க்ரூஸ் மற்றும் லக்கி நாராயணன் ஆகியோர் நுழைந்தனர்.இவர்களில் முதலாவது சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலக்ஷ்மி வென்றார். சரண் சக்தி 2-வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற நடிகை விஜயலஷ்மிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.