பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

vellamதொடர் மழையால் பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 100 வருடங்களுக்கு பின் வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கன அடியாக உயர்வு - உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் 30க்கும் அதிகமான கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர் வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் சுமார் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பிய காரனத்தினாலும்  இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வரலாறு காணாத வகையில், சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வரத்து உள்ளதால், வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி,சுமைதாங்கி உள்ளிட்ட 30க்கும் அதிகமான  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ,குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்  மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

மேலும் வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து  ஆந்திர மாநிலம் சித்தூர் கலவகொண்டா அணையிலிருந்து 10,000 கனஅடி நீரானது திறக்கப்படுகிறது. அப்படி வெளியேறும் நீரானது காஞ்சிபுரம் செங்கல்பட்டு கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் வயலூர் வழியாக கடலில் கலக்கிறது.  அந்த உபரிநீரும் பாலாற்றுக்கு வரக்கூடிய நிலையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.