கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவின் வலிமை உலகிற்கே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது என்று ஹாங்காங்கில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பேசி இருக்கிறார். 


கொரோனாவை எதிர்கொண்டு மீண்டு வந்தது மட்டுமில்லை, கொரோனாவினால் கஷ்டப்படும் உலக நாடுகளுக்கு உதவி புரிந்து நல்ல பெயர் எடுக்கவும் முடிந்துள்ளது. கொரோனாவினால் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான தேவை பெருகிய போது இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து உதவியது.


கொரோனாவினால் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான தேவை பெருகிய போது இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் அதிலிருந்து மீள்வது மட்டுமே குறிக்கோள் என்று வைத்துக்கொள்ளாமல் கல்வி, தயாரிப்பு, வேளாண் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டது. இன்னும் செய்ய வேண்டியது கடமைகள் நிறைய இருப்பினும் அமைதி, வளர்ச்சி, கூட்டுறவை வளர்க்க இந்தியா பாடுபடும்” என்று விக்ரம் மிஸ்ரி  பேசியுள்ளார்.