பெற்ற மகளை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை, மகளின் காதலன் மீது பழி போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தேனி அருகே தான் இப்டபி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்து உள்ள தேவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்த சூழலில் தான் அந்த மாணவி திடீரென்று கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக திடீரென்று அனுமதிக்கப்பட்டார். 

அங்கு, அந்த மாணவிக்கு சிக்ச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, அந்த மாணவியின் வயதில் சந்தேகம் அடைந்த அரசு மருத்துமனையின் மருத்துவர்கள், இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் அளித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த அதிகாரிகள், மருத்துவமனையில் உள்ள அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த மாணவிக்கு 17 வயது என்பது தெரிய வந்தது. 

இது குறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அப்போது, தனது உறவினரான 22 வயது இளைஞனை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பிணியானதாகவும் அந்த சிறுமி தெரிவித்தார். 

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையிக்கு பிறகு, சிறுமியை காதலித்து வந்த சிறுமியின் உறவினரான 22 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், “சிறுமியை தான் காதலித்தது உண்மைதான் என்றும், ஆனால் அவரது குழந்தைக்கு நான் காரணம் இல்லை என்றும், நான் ஒரு போதும் அந்த பெண்ணிடம் தவறாக நடக்கவில்லை” என்றும், நீதிபதியின் முன்பு அவன் கதறி அழுதிருக்கிறான்.

இதனால், சந்தேகம் அடைந்த நீதிபதி, உண்மையை கண்டறிய உத்தரவிட்டார்.

இதனால், மாணவியின் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த மாணவியிடம் மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அப்போது, அந்த மாணவி சரியாக பதில் அளிக்காத நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் காதலன் மற்றும் பிறந்த குழந்தை ஆகிய 3 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில், சிறுமியின் தந்தையின் டி.என்.ஏ.வும், குழந்தையின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போனது. ஆனால், காதலனின் டி.என்.ஏ. மாறுபட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது மகளை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். 

அத்துடன், “இது குறித்து வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன்” என்று தந்தையே, தனது மகளை மிரட்டி வந்திருக்கிறார்.

இதனையடுத்து, போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அந்த மாணவியின் காதலனை விடுதலை செய்தனர். 

இதனிடையே, பெற்ற மகளையே தந்தை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கி விட்டு, காதலன் மீது பழி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.