பிக் பாஸ் 4ல் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பும் வகையில் டிக்கெட் டு finale டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று மிக வித்யாசமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளரை பற்றி குறை கூற வேண்டும் என சொல்லப்பட்டது. ஆரி பற்றி தான் பலரும் அதிக அளவில் புகார் கூறினார்கள். 

அவர் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார் எனவும் குற்றம் சொன்னார்கள். ரியோ பேசும்போது ஆரி பேசுவதை சுருக்கமாக பேசினால் அவருக்கு எதிரில் யாருமே நிற்க முடியாது என கூறி இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற புதிய 8வது டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாக்கியமாக எடுத்து அது யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்துடன் சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் ஆரி பேசும்போது இது பற்றி விளக்கம் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என சொல்லி இருக்கிறார். அதை பார்த்து மற்றவர்களும் ஆச்சர்யம் அடைந்துவிட்டனர். வாட் எ improvement என ரம்யா ஆச்சர்யத்துடன் சொல்ல, முதல் முறையாக ஆரி ஒரு விஷயத்தை fun ஆக சொல்லி முடித்துவிட்டு வந்திருக்கிறார் என ரியோவும் அவர் பாராட்டி தள்ளினார்.

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், தேசத்தோடு ஒட்டி வாழ்.. என்ற துண்டு வாக்கியத்தை ரம்யா எடுக்கிறார். அதை படித்தவுடன் அந்த வாக்கியம் ஆரிக்கு பொருந்துகிறது என கமெண்ட் செய்தார். பிக்பாஸ் வீட்டில் ஆரியை தவிர்த்து 7 பேர் இருந்தாலும், அவர்களோடு கருத்து வேறுபாடு இருக்கு என்று கூறிவிட்டு சென்றார். 

அதன் பின் வந்த பாலாஜிக்கு, துன்பம் மறந்து வாழ் என்ற வாக்கியம் கிடைக்கிறது. அந்த வாக்கியம் ஆரிக்கு பொருந்துவதாக கூறினார். ஆரி அண்ணன் விளையாடிய முறை எனக்கு பிடிக்காமல் இருக்கலாம், அது என்னோட கருத்து. ஆனால் சண்டையை மறந்துவிட்டு அடுத்த நாள் நன்றாக பேசி பழகுவார். எவ்வளவு துன்பம் வந்தாலும்...ஆரி ஆரியாவே இருக்காரு என பாராட்டினார்.