மாமியாரின் கள்ளக் காதல் உறவை தட்டிக்கேட்ட மருமகளை, மாமியாரின் கள்ளக் காதலன் சரமாரியாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண், அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில், தனது கணவர் வீட்டில் இருந்தபடியே படித்துக்கொண்டு வருகிறார்.

இந்த மாணவிக்கு கொரோனா காரணமாக, தனது மாமியார் வீட்டில் கணவனுடன் வசித்து வந்த நிலையில், ஆன்லைன் மூலமாகவும் படித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், அந்த மாணவியின் மாமியாருக்கும், அதே பகுதியில் உள்ள மற்றொரு நபருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. 

அதுவும், மாணவி வைஷ்ணவி வீட்டில் இருக்கும் போதே, அந்த கள்ளக் காதலன், தனது மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்று உள்ளார். 

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மருமகளான வைஷ்ணவி, இது தொடர்பாக தனது மாமியாரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். 

இதன் காரணமாக, மாமியார் - மருமகள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சண்டி வந்துள்ளது 

இந்த சண்டை பெரிதாக முற்றிய நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு கை தகராறாக மாறியிருக்கிறது. 

இந்த நிலையில் தான், வழக்கம் போல மாமியாரை பார்க்க வந்த அந்த கள்ளக் காதலனை, மருமகள் வைஷ்ணவி வீட்டிற்குள் உள்ளே விடாமல் வாசலிலேயே வைஷ்ணவி தடுத்து நிறுத்தி இருக்கிறார். 

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அந்த கள்ளக் காதலன், வைஷ்ணவியின் முகத்தில் சரமாரியாக பலமாக தாக்கி இருக்கிறார்.

இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மருமகள் வைஷ்ணவியின் முகம் முற்றிலுமாக உருகுலைந்து போனது. 

வைஷ்ணவியின் முகம் தாக்குதலுக்கு உள்ளாகி கடுமையாக வீங்கிய நிலையில், அவரின் கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதை அடுத்து தாக்குதலுக்கு ஆளான மருமகள் வைஷ்ணவி, அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும், இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, “என் கணவர் வேலைக்கு சென்றதும், என் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும், தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என்று கூறுவார்” என்றும், அவர் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, மாமியாரின் கள்ளக் காதல் உறவை தட்டிக்கேட்ட மருமகள், மாமியாரின் கள்ளக் காதலனால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.