தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்கள் ஒருவரான நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ரிலீசான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆன நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நேரடியாக திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க ரிலீஸாகியுள்ளது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.

தொடர்ந்து நல்ல கருத்துக்களுடன் கூடிய சமூகப் பொறுப்புள்ள படைப்புகளை தனது திரைப் படங்களின் வாயிலாக வழங்கி வரும் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடைசியாக வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் பழங்குடியின மக்களுக்கான அநீதிகள் குறித்து அழுத்தமாக பேசியது. பின்னர் அதன் எதிரொலியாக தமிழக அரசு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களையும் பட்டாக்களையும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பேசியுள்ளதாக நல்ல விமர்சனங்கள் வெளிவருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்காவான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியுள்ள எதற்கும் துணிந்தவன்  படம் ரிலீசான அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தின் சிறப்பு காட்சி இன்று(மார்ச் 10) முதல் அதிகாலை முதல் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் திரையரங்கில்  இயக்குனர் பாண்டிராஜ், நடிகர்கள் வினய் மற்றும் புகழ் உள்பட எதற்கும் துணிந்தவன் படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்த முதல் காட்சியில் படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்த்த வீடியோ தற்போது நமது கலாட்டா சேனலில் வெளியானது. அந்த வீடியோ இதோ…