தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘’ தமிழ்நாட்டிற்கு அதிகமான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு இந்த பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை. 


சென்னை – சேலம் விரைவுச்சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்று தமிழகத்தின் நலன் கருதி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் இது தேர்தலுக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் சொல்லிகிறார்கள். 


பாஜக, எந்த மதத்துக்கும் எதிரான கட்சி இல்லை. மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களைக் கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் எந்த மதத்தையும், தனி நபரையும் கொச்சைப்படுத்தக் கூடாது. ” என்றார்