டெல்லியில் போராட்டி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பிரபலங்கள் குரலெழுப்பியுள்ள நிலையில், மாநிலங்களவையில் புதிய வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து 15 மணி நேரம் விவாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புதிய வேளாண் சட்டங்கள் குறித்து நேற்றைய நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குடியரசு தலைவரின் உரை மீதான விவாதத்திற்கு பின்னர் இன்று புதிய வேளாண் மசோதா குறித்து விவாதம் நடைபெறும் என்றும் இதனால் மாநிலங்களவையில் கேள்வி நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார். 


புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க 5 மணி நேரம் வேவதை என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் இப்போது 15 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத் நன்றி கூறியுள்ளார்.