“4 ஆண்டுகளாக என்னை மிரட்டியே பலாத்காரம் செய்தார்” என்று, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி 
உள்ளது.

கர்நாடக மாநிலத்தில்தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் காவல் நிலையத்தில் அசோக்குமார் என்பவர், இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 

இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, அதே காவல் நிலையத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் பிள்ளைகளின் தாயார் ஒருவர், பாலியல் பலாத்கார புகார் அளித்து உள்ளார். இதனால், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

அந்த பெண் அளித்துள்ள பாலியல் புகாரில், “நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வழக்கு குறித்து சாகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நான் வந்து சென்றபோது, அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், என்னிடம் புகாரை பெற்றுக் கொண்டார்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“அதன் தொடர்ச்சியாக, அவர் என்னுடைய செல்போன் எண்ணையும் கேட்டு பெற்றுக் கொண்டார் என்றும், இதனையடுத்து, அவர் அடிக்கடி என்னுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், ஒரு முறை வழக்கு தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று கூறி, என்னை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரச்சொன்னார் என்றும், அதனை நம்பி நானும் அங்கு சென்ற போது, அவர் எனக்கு குடிக்கப் பாலும், குளிர் பானமும் கொடுத்தார். அப்போது, அதைக் குடித்த நான் சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன்” என்றும், கூறியுள்ளார்.

அத்துடன், “நான் மயக்கத்தில் இருந்த போது, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என்றும், அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

“அதே நேரத்தில், நான் மயக்கத்தில் இருந்த போது, என்னை பலாத்காரம் செய்யும் அதே வேளையில் அவர என்னை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொண்டார் என்றும், அதன் பிறகு, அவர் அடிக்கடி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு உல்லாசத்து அழைத்துத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார் என்றும், அப்படி ஆசைக்கு இணங்கவில்லை என்றால், என்னுடைய ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று என்னை தொடர்ச்சியாக அவர் மிரட்டி வந்தார்” என்றும், பாதிக்கப்பட்ட பெண் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

இதனால், “எனக்கு வேறு வழி தெரியாமல், நான் அவருடைய மிரட்டலுக்கு அடி பணிந்தேன் என்றும், அதனைப் பயன்படுத்திக் கொண்ட அவர், கடந்த 4 ஆண்டுகளாக என்னை மிரட்டியே அவர் உல்லாசம் அனுபவித்து வந்தார்” என்றும், அந்த பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“தற்போது நான் என்னை விட்டு விடும்படி அவரிடம் பல முறை கெஞ்சினேன் என்றும், ஆனால் அவர் என்னை தொடர்ந்து மிரட்டுகிறார் என்றும், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்றும், அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “என்னுடைய 2 மகள்களையும் பலாத்காரம் செய்துவிடுவேன்" என்று என்னை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

“போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த மிரட்டல்களால் நான் மிகவும் மனமுடைந்து இருக்கிறேன் என்றும். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

முக்கியமாக, “என் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அவரிடம் இருந்து கைப்பற்றி அவற்றை அழித்துவிட வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட பெண் அந்த புகாரில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதனிடையே, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.