விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கினர். 

இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி நடித்து வருகிறார். ஆர்யா ஜோடியாக நடிகை மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகினார். எனிமி படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

இறுதியாக ஆர்யாவின் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சாங்கி சிறையில் இருக்கும் கைதியாக அதில் காட்சியளித்தார் ஆர்யா. இப்படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடைபெற்று வந்தது. 

50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் விஷால் அட்டகாசமாக நிற்பது போன்ற ஒரு புதிய ஸ்டில்லை எனிமி படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதை பார்த்த ரசிகர்களோ ஆக்ஷன் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருவதாக பதிவு செய்து வந்தனர். ஏற்கனவே நடிகர் ஆர்யாவுக்கு சண்டை காட்சியின் போது அடிபட்டத்தை ரசிகர்கள் மறந்து விட முடியாது. 

இந்நிலையில் துபாய் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர். இதனைத் தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் மிகுந்த ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.