கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்ததை விட, பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் இந்த 2021 ல் பெரும் அளவில் அதிகரித்து காணப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

கொரேனா ஊரடங்கு கால கட்டத்தில் தான், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசே தெரிவித்திருந்தது.

இப்படியான நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்ததை விட, பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளான இந்த 2021 ஆம் ஆண்டு மிகப் பெரும் அளவில் அதிகரித்து காணப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், “கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து 19,730 புகார்கள் வந்ததாக” கூறப்பட்டு உள்ளது.

“ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்கள் மட்டும் சற்று அதிகரித்து மிகச் சரியாக 23,722 புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், “தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்ததைக் காட்டிலும், தற்போதும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்கள் மாதம் 2000 யை தாண்டி பதிவு செய்யப்படுவதாக” தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறப்பட்டு உள்ளது.

“இதில், நான்கில் ஒரு பங்கு பெண்களுக்கு எதிராக வீட்டில் நடக்கும் வன்முறை குறித்த புகார்கள்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 “பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை தொடர்பாக 1,463 புகார்கள் இந்த 2021 ஆம் ஆண்டில், அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது 2021 மார்ச் 25 ஆம் தேதி வரையில் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் பெறப்பட்ட புகார்கள் என்று, அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், “கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதில் பல பெண்கள் வீட்டு வன்முறைக்கு ஆளானார்கள் என்றும், இதனால் வீட்டு வன்முறை குறித்த புகார்களை தெரிவிக்க ஒரு வாட்ஸ்ஆப் எண்ணையும்” தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்தது. 

அதன் படியே, “வீட்டு வன்முறை தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சில மாதங்களில் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளதாகவும்” அதில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 25,886 புகார்கள் பெறப்பட்டு உள்ளன” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இதில் 5,865 வீட்டு வன்முறை புகார்கள்” என்றும், அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிட்டு கூறப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா பேசும் போது, “வீடு என்பது கணவன் - மனைவி இருவரின் பணியிடமாகவும், தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளாகவும் மாறிவிட்டது” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“இந்த சூழ்நிலையில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்து கொண்டு குடும்பங்களையும் கவனித்துக்கொண்டு பல தொழில்களையும் செய்து வருகின்றனர் என்றும், பொருளாதார பாதுகாப்பின்மை, மன அழுத்த நிலைகள் அதிகரிப்பு, பதட்டம், நிதிக் கவலை மற்றும் பெற்றோர்கள், குடும்பத்தினரிடம் உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாதது ஆகியவை 2020 ஆம் ஆண்டில் பல நிகழ்வுகள் மறைந்து, வன்முறைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்” என்றும், தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.