2 சிறுமிகளை 8 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த உச்சக்கட்ட கொடூர சம்பவத்தால், அந்த கிராமமே பீதியில் உரைந்து போய் உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள், அங்குள்ள பள்ளியில் படித்து வந்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக, நாடு முழுவதும் கொரேனா ஊரடங்கு போடப்பட்டதால், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த மாணவிகள் மீண்டும் பள்ளிக்குச் சென்று வந்தனர்.

இப்படியான நிலையில், கோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள், தங்களது ஆண் நண்பர்கள் இருவருடன் அங்குள்ள கட்டியாபரி பகுதிக்குச் சென்று உள்ளனர். 

அங்கு, அந்த 2 ஆண் நண்பர்கள் உடன் மேலும் 6 பேர் அந்த பகுதியில் மறைந்து இருந்து உள்ளனர். இரு சிறுமிகளையும், இரு நண்பர்களும் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு அழைத்து வந்ததும், அங்கு மறைந்திருந்த 6 கூட்டாளிகள் உட்பட இரு ஆண் நண்பர்களும் சேர்ந்து மொத்தம் 8 இளைஞர்களும் சேர்ந்து அந்த 2 சிறுமிகளையும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இப்படியாக, 8 பேரும், அந்த இரு சிறுமிகளிடமும் மாறி மாறி தங்களது காம வெறியாட்டத்தைக் காட்டியிருக்கிறார்கள். 8 பேரிடமும் காம வெறி எல்லாம் தீர்ந்து போன பிறகு, அந்த இரு சிறுமிகளையும் அவர்கள் உயிருடன் விட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து, அங்கிருந்து எப்படியோ ஊர் திரும்பிய சிறுமிகள் இருவரும், தங்களது நடந்த பாலியல் கொடுமைகளை தங்களது பெற்றோர்களிடம் கூறி, கதறி அழுதிருக்கிறார்கள்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், அங்குள்ள சம்பாஹவர் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அங்குள்ள ஃபுல்டாலி பகுதியைச் சேர்ந்த 19 வயதான மைக்கேல், 19 வயதான பீரேஷ், 19 வயதான ஜுவல், 19 வயதான ரிஷிதா, 21 வயதான ஜாகு, 22 வயதான பிமல், 22 வயதான பிகாஷ் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து இரு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட 8 இளைஞர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 2 சிறுமிகளை 8 இளைஞர்கள் சேர்ந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அந்த கிராம மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.