அமெரிக்க விமான நிறுவனமான போயிங் ரஷிய விமான நிறுவனங்களுக்கான தனது ஆதரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Boeing flight

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. 

மேலும் இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன.  இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.  

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதனைத்தொடர்ந்து நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதனைத்தொடர்ந்து உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் ரஷியா மீது கடுமையான தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் இன்று உரையாற்றும் போது அமெரிக்க வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு ரஷிய விமானங்களுக்கு தடை விதிக்கப்பார் என்று தகவல் வெளியானதை அடுத்து அமெரிக்க விமான நிறுவனமான போயிங் ரஷிய விமான நிறுவனங்களுக்கான தனது ஆதரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து போயிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ரஷிய விமான நிறுவனங்களுக்கான பாகங்கள், பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேவைகளையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். மோதல் தொடர்வதால், ரஷியாவில் உள்ள எங்கள் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் குழுக்கள் கவனம் செலுத்துகின்றன. மேலும் உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள எங்கள் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.