உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கமல் போன்ற ஒரு மகாநடிகனுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் முக்கிய வேடங்களில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.மூன்று பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார்.

ஆங்கில படங்களை போல பல கைதி மற்றும் விக்ரம் படங்களின் கதைக்களம் இணைவது போல படமாக்கியுள்ளார் லோகேஷ்.பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.நேற்று சென்னையின் சத்யம் திரையரங்கில் பிரபலங்களுக்கென ஒரு பிரத்யேக காட்சி நடைபெற்றது.

இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு படத்தினை பார்த்து ரசித்தனர்.இந்த பிரத்யேக காட்சியில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அவரது மகளுடன் கலந்துகொண்டு படத்தினை பார்த்து ரசித்துள்ளார்.இதுகுறித்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.