சொகுசு காருக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்! செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் வெறிச்செயல்..!

சொகுசு காருக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்! செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் வெறிச்செயல்..! - Daily news

அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களால் சிலர், சொகுசு காருக்குள் வைத்து சிறுமி ஒருவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் கடந்த 28 ஆம் தேதி அன்று, அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், 5 சிறுவர்களால் அதிரடியாக சொகுசு காரில் கடத்தப்பட்டிருக்கிறார்.

இப்படி, பென்ஸ் சொகுசு காரில் கடத்தப்பட்ட அந்த சிறுமி, அங்குள்ள ஒரு இரவு நேர பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்திருக்கிறார். 

அங்கு, அந்த இரவு நேர நிகழ்ச்சி முடிந்த நிலையில், அதன் பிறகு அந்த 17 வயது சிறுமியை, அவருடைய “வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக” கூறி விட்டு, அந்த 5 சிறுவர்களும் தங்களது சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றி அழைத்துச் சென்று உள்ளார்.

இப்படியாக, அந்த 17 வயது சிறுமியுடன் 5 சிறுவர்களும் அந்த இரவு நேரத்தில் மது போதையில் காரில் சென்ற நிலையில், அந்த சிறுமி மீது அந்த 5 பேரும் சபலப்பட்டு உள்ளனர்.

இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத அங்குள்ள ஒரு பகுதியில் வைத்து, அந்த 17 வயது சிறுமியை காருக்குள் வைத்தே அந்த 5 சிறுவர்களும் கூட்டாக சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த சிறுமியை கீழே இறக்கி விட்டுவிட்டு அந்த 5 இளைஞர்களும் அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கின்றனர்.

பின்னர், நடக்க முடியாமல் நடந்து தனது வீடு திரும்பிய அந்த சிறுமியின் முகம் மற்றும் உடம்பின் சில இடங்களில் காயங்கள் இருந்து உள்ளது.

அப்போது, சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தை பார்த்த அவரது தந்தை விசாரித்து உள்ளார். அப்போது தான், “அங்குள்ள ஒரு பப்புக்கு போய்விட்டு திரும்பி வரும்போது, என்னை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை” கூறி அழுதிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தந்தை, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த சிறுவர்கள் பற்றிய முழு தகவலையும் திரட்டி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்..

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவன் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வின் மகன் என்பதும், மற்றொருவன் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த அன்று சம்மந்தப்பட்ட அந்த 5 சிறுவர்களுடன், அந்த சிறுமி பேசி கொண்டிருக்கும் வீடியோ, சற்று முன்னதாக வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசாரிடம், “இது, மது அருந்தாத பார்ட்டி என்றும், இந்த பார்ட்டியில் இருந்தவர்களுக்கு மதுபானம் யாருக்குமே வழங்கப்படவில்லை” என்றும், அந்த பப் நிர்வாகம் கூறியிருக்கிறது.

எனினும், இந்த சிசிடிவி காட்சியானது, அந்த மாநிலம் முழுவதும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது, இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக போலீசார் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, பாதிக்கப்பட்ட அந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தற்போது சம்மந்தப்பட்ட அந்த 5 இளைஞர்களும், தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, சிறுமி கூட்டுப் பாலியல் பலத்கார சம்பவம், தெலுங்கானா அரசியலில் பெரும் சலசலப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment