ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளக் காதல் உறவில் இருந்த மனைவியை அழைத்து எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் கேட்க மறுத்ததால், கணவனே அவரை துடிக்க துடிக்க கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். 

இந்த தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துகொண்டே இருந்தது. 

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே பெரிய அளவில் சண்டை வந்த நிலையில், இருவரும் தனித் தனியாக பிரிந்து தனியாக வசித்து வந்தனர். 

இந்த நிலையில் தான், கணவன் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். 

அப்போது, திருமணமாகி கணவரால் கைவிடப்பட்ட அமுதா என்ற பெண்ணுடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாமாக இருந்து வந்திருக்கின்றனர். 

அத்துடன், இருவரும் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து இருவரும் கணவன் - மனைவி போல், வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் தான், அமுதா செங்கல் சூளையில் வேலை பார்க்கும், வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனை நேரில் பார்த்த மாரியப்பன் அவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி வந்துள்ளார். அதனை அமுதா கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன் கள்ளக் காதலி அமுதாவிடம் “கள்ளக் காதலை கைவிடுமாறு” அறிவுரை கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் எதையும் கேட்காமல் தனது கள்ளக் காதலை தொடர்ந்திருக்கிறார். இதனால், அவரை கொலை செய்ய மாரியப்பன் திட்டம் தீட்டியிருக்கிறார்.

அதன்படி, வழக்கல் போல வேலைக்கு செல்வது போல் அங்குள்ள அண்ணத்திக்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அமுதாவை, மாரியப்பன் அழைத்து சென்று உள்ளார். 

அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றதும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆத்திரம் தீர துடிக்க துடிக்க அமுதாவின் கழுத்து மற்றும் நெஞ்சு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக மாரியப்பன் குத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அமுதா, உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மாரியப்பன், அங்கிருந்து நேரடியாக பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்திருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர். 

அப்போது, அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த அமுதாவை மீட்டு, பணகுடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் அமுதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்த நிலையில், உயர் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.