“இயற்கை வேளாண்மை மற்றும் விளை பொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்” என்றும்,  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சட்டமன்றத்தில் “தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து இடம் பெற்றுள்ளதாக” குறிப்பிட்டு பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “உழவு தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும்” பேரவையில் விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் நலன் சார்ந்து வேளாண் பட்ஜெட்டை அறிவித்தார். அதன்படி,

- பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது அறிவிப்பு.

- ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என்று, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

- சிறந்த விவசாயிகளுக்கு பரிசு அளிக்கும் வகையில், இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைக்கப்படும். 

- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 300 ரூபாய் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த 5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

- சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க 5 கோடி நிதி ஒதுக்கீடு.

-  65 கோடி ரூபாயில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும்.

- செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ரூபாய் 1.50 கோடி ஒதுக்கீடு.

- வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

-  38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க 95 கோடி ஒதுக்கீடு.

- குறிப்பாக, தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க 27.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தேனீ வளர்ப்பு திட்டத்துக்கு 10.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

-  175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு 10 கோடி ரூபாயில் திட்டம்.

- உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் சிறுதானியம், பயிறு வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை.

- பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2,546 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.

- 200 அரசு மாணவியர் விடுதிகளில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்படுகிறது.

- திண்டிவனம், தேனி, மணப்பாறையில் 381 கோடி ரூபாயில் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

- டெல்டா மாவட்டங்களில் 4964 கிலோ மீட்டர் நீளம் உள்ள கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.