சென்னை அண்ணாசாலையில் மாஸ்க் போடாமல் சென்று கொண்டு இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

mkstalin

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் காரணமாக கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டுவிட்டதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இதனால் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளி விட வேண்டும் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு இருந்தார். சென்னையில் 40 சதவிகிதம் பேர்தான் மாஸ்க் அணிந்து உள்ளனர். வேறு யாரும் மாஸ்க் அணிவது இல்லை. மாஸ்க் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

அதனைத்தொடர்ந்து சென்னையில் இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். வார்டுக்கு 100 பேர் வீதம் ஒவ்வொரு வார்டுக்கும் ஆட்கள் களமிறக்கப்பட்டு மாஸ்க் அணியாத நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாஸ்க் மட்டுமே கொரோனா பரவலை தடுக்கும். ஓமிக்ரான் தீவிரத்தை மாஸ்க் மட்டுமே குறைக்கும் என்று அரசு சார்பாக தீவிரமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்கள் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றும் கண்காணிப்பின் போது பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வாங்கியதன் மூலம் இவ்வளவு தொகை திரட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் மொஅபராதம்த்தம் 2,603 பேரிடமிருந்து ரூ. 5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஒவ்வொருவரிடமும் தலா 200 ரூபாய் அபராதம் வாங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் முககவசம் அணியாத மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முககவசங்களை வழங்கினார். அண்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது முதல்வர் ஸ்டாலின் சாலையில் இறங்கி மாஸ்க் வழங்கினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் இருந்தார். கையில் மாஸ்க் பாக்ஸ் ஒன்றை வைத்துக்கொண்டு முதல்வர் எல்லோருக்கும் மாஸ்க் வழங்கினார்.

மேலும் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அருகில் சென்று இப்படி வெளியே வர கூடாது. இது பாதுகாப்பு இல்லை. கொரோனா விதிகளை கடைபிடியுங்கள் என்று தெரிவித்தார். அதோடு தனது கையால் அவர்களுக்கு மாஸ்க் அணிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த செயல் அங்கிருந்த மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. முதல்வர் இப்படி மக்களுக்கு மாஸ்க் அணிவித்து வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.