தமிழகம் முழுவதும் 21 பொருட்கள் அடங்கிய  ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

pongal parisu

இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுருந்தது. அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

மேலும் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடந்த வார இறுதியில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக இந்த ஆண்டும் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு வழங்கப்பட்டிருக்கும் டோக்கன் அடிப்படையிலும், தினமும் 200 ரேஷன்கார்டுகள் வீதம் பொருட்களை வழங்கவும் கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத்தொடர்ந்து பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து உணவு வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில் வருகிற 10-ம் தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாங்க முடியாதவர்கள் 10-ம் தேதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்லலாம். பண்டிகை முடிந்த பிறகும் கூட தங்களுக்கான பொருட்களை பெற்றுச்செல்லலாம் என்று தெரிவித்தனர்.

என்னென்ன பொருட்கள்? பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள 21 பொருட்களின் விவரம் வருமாறு: பச்சரிசி - 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ,முந்திரி - 50 கிராம்,திராட்சை - 50 கிராம்,ஏலக்காய் - 10 கிராம், பாசிப்பருப்பு - 500 கிராம்,நெய் - 100 கிராம்,மஞ்சள் தூள் - 100 கிராம்,மிளகாய்தூள் - 100 கிராம்,மல்லித்தூள் - 100 கிராம்,கடுகு - 100 கிராம்,சீரகம் - 100 கிராம்,மிளகு - 50 கிராம்,புளி - 200 கிராம்,கடலைபருப்பு - 250 கிராம்,உளுத்தம்பருப்பு - 500 கிராம்,ரவை - 1 கிலோ,கோதுமை மாவு - 1 கிலோ,உப்பு - 500 கிராம்,கரும்பு - 1, துணிப்பை - 1 வழங்கி முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.