16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்துக்கொண்டு, காதல் கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம்  மாவட்டம்  தம்மம்பட்டி அடுத்து உள்ள செந்தாரப்பட்டி அங்கமுத்து மூப்பனார் தெருவைச் சேர்ந்த 27 வயமதன மணிகண்டன் என்பவர், அந்த பகுதியில் பால்காரராக பணியாற்றி வந்தார்.

27 வயதான மணிகண்டன், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராசிபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் 16 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில், அந்த மாணவி செந்தாரப்பட்டியில்  உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு கடந்த ஆண்டு வந்த போது, அவரை தனது காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்.

இதனையடுத்து, அந்த மாணவியை மணிகண்டன் காதலித்து வந்த நிலையில், அந்த 16 வயது சிறுமியும், மணிகண்டனை காதலித்து வந்து உள்ளார்.

இந்த காதல் விவகாரம், இருவர் வீட்டிற்கும் தெரிய வந்த நிலையில், இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனாலும், பெற்றோர் எதிர்ப்பை மீறி, அந்த சிறுமியை மணிகண்டனம் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு, சிறுமியுடன், மணிகண்டன் தனியாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் அதிகாலை நேரத்தில், காதல் மனைவியான அந்த 16 வயது சிறுமியுடன், 27 வயதான கணவன் மணிகண்டன், சண்டை போட்டு உள்ளார். 

முதலில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், கடும் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது மனைவியான அந்த 16 வயது சிறுமியை அடித்து கொலை  செய்து உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அந்த சிறுமி, மயங்கி விழுந்த நிலையில், அப்படியே உயிரிழந்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த 27 வயதான மணிகண்டன், சிறுமியின் உறவினர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, அவர் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு விரைந்து வந்த சிறுமியின் உறவினர்கள், வீட்டிற்கு சென்று பார்த்த போது, அந்த சிறுமி கழுத்தில் பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்து உள்ளார்.

இதனைப் பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத நிலையில், இது குறித்து தம்மம்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள காதல் கணவன் மணிகண்டனைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரபபையும் ஏற்படுத்தி உள்ளது.