காரில் லிப்ட் கேட்டு ஏறிய தாயையும், பெண்ணையும் மயக்கி டிரைவர், ஒருவர் மயக்க நிலையில் வைத்து, தாயின் முன்பு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர், தனது தாயாருடன் ஹரியானாவில் கூலி வேலை செய்து வந்தார். 

இந்த சூழலில் தான், இவர்கள் இருவரும் கடந்த வாரம் இரவு நேரத்தில் தங்களது வேலையை முடிந்துக்கொண்டு, தங்களது வீட்டுக்கு வருவதற்க்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். 

ஆனால், வெகு நேரம் ஆகியும் அங்கு பேருந்து வராத நிலையில், தாயும் - மகளும் அங்குள்ள சாலையில் நின்றுக் கொண்டே இருந்து உள்ளனர்.

அப்போது, அந்த வழியாக கார் ஒன்று வந்து உள்ளது. அப்போது, பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த இவர்கள் முன்பு வந்து தனது காரை நிறுத்திய அந்த டிரைவர், அந்த இரு பெண்ணிடம் “அங்குள்ள மதுராவில் கொண்டு போய் விடுவதாக” கூறி, அவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

அதன் படி, அந்த கார் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்கள் இருவருக்கும், அந்த டிரைவர் குடிக்க தண்ணீர் கொடுத்து உள்ளார்.

அந்த தண்ணீரை வாங்கி குடித்த தாயும் - மகளும் அடுத்த சில நிமிடங்களில் அந்த காருக்குள்ளேயே அங்கேயே மயங்கி உள்ளனர்.

அதன் பிறகு, அந்த டிரைவர் அந்த காரில் மயங்கி கிடந்த இளம் பெண்ணை, அருகில் மயங்கி கிடந்த அவரின் தாயார் முன்பே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

இதனையடுத்து, தனது பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த இரு பெண்களையும், அங்குள்ள ஒதுக்கு புறமான ஒரு இடத்தில் கீழே இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து எழுந்த தாயும் - மகளும், தங்களது உடைமகள் களைந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அவர்களுக்கு அப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இரு பெண்களும், அங்கிருந்து நேராக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பிடிக்க தனி படை அமைத்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.