முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் பாலியல் புகார் வழக்கில், கருக்கலைப்பு செய்த மருத்துவருடன் நடிகை பேசிய ஆடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பிரபல நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் தான், சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கிற்கு இணையாக தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், “அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மோசடி செய்ததாகவும், மணிகண்டன் உடனான இந்த காதல் வாழ்க்கையில், அடுத்தடுத்து 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைக்கப்பட்டதாகவும்” அந்த நடிகை சாந்தினி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த புகாரின் படி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் பாதிப்புக்குள்ளான நடிகை சாந்தினி, மணிகண்டனின் நண்பரான மருத்துவர் அருணுடன் தொலைப்பேசியில் உரையாடிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உரையாடலை நாடக வடிவில் தற்போது பார்க்கலாம்..

நடிகை சாந்தினி : நான் சாந்தினி மலேசியாவிலிருந்து பேசுறேன்.

டாக்டர் அருண் : நலமாக இருக்கிறீர்களா? 

நடிகை சாந்தினி : நலமாக இருக்கிறேன். ஆனால், அமைச்சர் மணிகண்டன் செய்த டார்ச்சரால் எனது வயிறுப் பகுதி முழுவதும் அப்படியே பாதிக்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் கருப்பாக இருக்கிறது. இப்படி கருப்பாக இருப்பதால், என் தாயார் “என்ன? என்ன?” சும்மா சும்மா கேள்வி கேட்கிறார். இதற்கு நான் என்ன பதில் சொல்லி சமாளிப்பது?

டாக்டர் அருண்: எந்த மாதிரியான பாதிப்பு இருக்கிறது?

நடிகை சாந்தினி : அமைச்சர் மணிகண்டன் எனக்கு செய்த செயல்பாட்டின் கர்ம வினைதான். அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரால் எவ்வளவு பாதிக்கப்பட்டேன் தெரியுமா? அமைச்சர் தனக்கு செய்த அனைத்துக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும். பதிலளிக்க வேண்டும். 

டாக்டர் அருண் : ஆமாம், உண்மை தான். 

நடிகை சாந்தினி : டாக்டர்.. அமைச்சர் மணிகண்டன் உங்கள் நண்பர்தானே? அவருக்குப் பதவி போனது ஏன் என உங்களுக்குத் தெரியாதா? அவரது பேச்சினால் தான் பதவி போனது. அரசுக்கு துரோகம் செய்துவிட்டார். 

டாக்டர் அருண் : ஆமாம்.

நடிகை சாந்தினி : எனது உடல் முழுவதும் காயங்கள், கருப்பு கருப்பாக இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டனைத் தொடர்பு கொண்டால், அவர் பேச மறுக்கிறார். நான் எத்தனை முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தான் எனக்கு கருக்கலைப்பு செய்தீர்கள். நீங்கள் கூறியதற்கு தற்போது அமைச்சர் என்ன சொல்கிறார்? நான் அவரை தொடர்பு கொண்டாலும் அவர் என் போனை எடுப்பதில்லை. முற்றிலுமாக அவர் என்னை தவிர்க்கிறார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து முதலமைச்சரிடம் நேரடியாக புகார் அளித்தால், அமைச்சர் மணிகண்டனின் நிலை என்ன ஆகும் என தெரியுமா? 

ஏற்கனவே அமைச்சர் மணிகண்டனுக்கு அதிக பிரச்னை இருக்கிறது. இது போன்று நான் எங்கேயாவது புகார் அளித்திருக்கிறேனா? நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு துரத்தியடிக்கும்படி தெரிவித்ததாக, அமைச்சர் மணிகண்டன் என்னிடம் கோபமாக கூறுகிறார். இது உண்மையா? அமைச்சர் மணிகண்டன் எனக்கு பல முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்த போதும், பல பிரச்னைகள் ஏற்பட்ட போதும், அதை பயன்படுத்தி நான் அதை வைத்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அது உங்களுக்கும் தெரியும். மலேசியாவில் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பவள் நான். 

டாக்டர் அருண் : நான் அது போன்று தெரிவிக்கவில்லை.

நடிகை சாந்தினி: நான் ஒரு முக்கியப் புள்ளி. எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், நான் எதையும் மணிகண்டனுக்கு செய்யவில்லை. நான் இந்த பிரச்னையை முதலமைச்சர் பழனிசாமியிடம் எடுத்துச் செல்வேன். ஏனென்றால், நான் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவள். முதலமைச்சரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். நானும்,  முதலமைச்சரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள். என்னால் முதலமைச்சர் உட்பட எந்த அமைச்சரையும் நேரடியாக சந்திக்க முடியும். 

இறுதியாக முதலமைச்சரிடம் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. 

டாக்டர் அருண்: பழகிய எனக்கும் எதுவும் செய்யவில்லை, அவரது தொகுதி மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. மலேசியாவில் உள்ள ராமநாதபுரம் மக்களும் அமைச்சர் மணிகண்டன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அது, எனக்கும் தெரியும். 

நடிகை சாந்தினி : ஒரு நண்பராக மணிகண்டனுக்கு நீங்கள் அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

டாக்டர் அருண் : நான் பல அறிவுரை வழங்கியும் அமைச்சர் கேட்கவில்லை.

நடிகை சாந்தினி : மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது மலேசியாவில் வெடி வெடித்துக் கொண்டாடினேன். அரசிடம் நேரடி தொடர்பில் இருந்தேன். 

அவருக்கு பதவி போக போகிறது என்பதை ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் நம்பவில்லை. தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற மமதையில் அவர் இருந்தார். நான் சாலையோரமாக நிற்கும் பெண்ணல்ல, தூதரகத்துடன் தொடர்பில், அரசு பதவியில் இருப்பவள். நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். 

மலேசிய தூதரகத்தில் பொறுப்பில் இருக்கும் நான், அவருக்கு எதிராக கடிதம் எழுதினால் அமைச்சர் மணிகண்டன் நிலை என்ன ஆகும்? எனக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லையெனில், சென்னைக்கு வந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்து முதலமைச்சரிடம் புகார் அளிப்பேன். கருக்கலைப்பு செய்த காரணத்தினால் உங்களுடைய பெயரை இழுக்க மாட்டேன். இருந்தாலும் நண்பர் என்ற அடிப்படையில் உங்களை எச்சரிக்கிறேன். அமைச்சர் மணிகண்டனுக்காக மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, வேண்டுதல் ஆகியவையின் போது நான் கூடவே இருந்தேன்.

இதனாலயே, எனது எடை குறைந்தது. ஆனால், இதையே தவறாக குற்றம்சாட்டி பலருடன் நான் தொடர்பில் இருப்பதால் தான், என் எடை குறைந்துள்ளதாக அவர் என் மீது அவதூறு பரப்புகிறார். மணிகண்டன் இது போன்று அவதூறாக பேசியதால் தான், மணிகண்டன் பதவி பறிபோனது. தவறுகளை சுட்டிக்காட்டும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது தான் அவர் தற்போது தனித்து விடப்பட காரணம். 

அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட உள்ளார் என முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து எனக்கு நேரடியாக முன்கூட்டியே தகவல் தெரிந்தது. அவர் நம்பவில்லை. தற்போது, அது நடந்து விட்டது.

டாக்டகர் அருண் : அவ்வாறு நீங்கள் புகார் அளித்தால், மணிகண்டன் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பில்லை.

இவ்வாறாக அந்த உரையாடல்கள் போய்கொண்டிருக்கும் நிலையில், கடைசியாக..

டாக்டர் அருண் : அமைச்சர் எங்கு இருக்கிறார்? அமைச்சரின் அரசு இல்லத்திலா? 

நடிகை சாந்தினி : பதவி பறிக்கப்பட்டும் 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டதால் அங்குதான் வசிக்கிறார். அமைச்சர் மணிகண்டன் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. என்னை பல அமைச்சர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஏன் மலேசிய ராஜாவே என்னை பின் தொடர்கிறார். 

என்று, அந்த உரையாடல் அழுகையுடனும், பல்வேறு கேள்விகளுடன் நிறைந்திருக்கிறது. இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த ஆடியோவை கைப்பற்றி தமிழக போலீசார் தீவிர விசாரணையில் தற்போது இறங்கி உள்ளனர்.