சீனா அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் 2022-ம் ஆண்டை தொடங்கி உள்ளது.

china corono cases

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது.  இதன்பின்பு பல்வேறு உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவியது. எனினும் பரவல் தொடங்கியதும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிப்புகளை சீனா கட்டுப்படுத்தியது.  கடந்த ஆண்டிலும் தொற்றை கட்டுக்குள் வைத்திருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது. இது பற்றி அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் டிசம்பர் 31-ம் தேதி 175 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  இதனால் கடந்த வாரத்தில் மொத்தம் 1,151 பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.

அதனைத்தொடர்ந்து இதே போன்று ஷாங்கி மாகாணத்தின் தலைநகரான ஜியான் நகரில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.  கடந்த டிசம்பர் 9-ம் தேதியில் இருந்து சனிக்கிழமை வரையில் மொத்தம் 1,451 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இது கடந்த 2021-ம் ஆண்டில் சீனாவின் எந்த நகரிலும் இல்லாத மிக அதிக எண்ணிக்கையாகும். அந்நகரில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராட வேண்டியுள்ளது. பரவலை கட்டுப்படுத்துவதற்கான திருப்புமுனை எதுவும் இன்னும் ஏற்படவில்லை என அந்நாட்டில் இருந்து வெளிவரும் சீனா டெய்லி என்ற அரசு ஆதரவு பத்திரிகை தெரிவித்தள்ளது.

கடந்த 2019 -ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.