மக்களின் நம்பத்தக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பது நமது கலாட்டா நிறுவனம்.செய்திகள் மட்டுமின்றி பலருக்கும் அவர்களது திறமையை பாராட்டி அவ்வப்போது விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறோம்.அந்த வகையில் இந்த வருடம் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு மிக பிரம்மாண்டமாக திரைத்துறையினரை கௌரவிக்கும் படி The Galatta Crown 2022 விருது விழா மே 8ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

திரைத்துறையில் சாதித்த பல அறிமுக கலைஞர்களுக்கும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் கௌரவித்து கலாட்டா பெருமை படுத்தியது.மேலும் சில அரசியல் சார்ந்த விருதுகள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்ற உரையாடல் என பல அம்சங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வாக இந்த விருது விழா நேற்று நடைபெற்றது.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் The Galatta Crown 2022வில் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.

இவரை தவிர சிவகார்த்திகேயன்,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,க்ரிதி ஷெட்டி,பிரியங்கா மோகன்,கல்யாணி ப்ரியதர்ஷன்,அருண் விஜய்,யோகி பாபு,வெங்கட் பிரபு,விக்னேஷ் சிவன்,அனிருத்,ஜீ வி பிரகாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இந்த பிரம்மாண்ட நிகழ்வின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-2021 வருடத்திற்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த Favourite நடிகர் விருதினை சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்காக வென்றார்.வித்தியாச முயற்சியாக எடுக்கப்பட்ட டாக்டர் படத்திற்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என்றும் படத்தில் வேலை பார்த்த அனைவரருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

எஸ் ஜே சூர்யா , உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் இருந்து விருதினை பெற்ற சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யாவின் வாய்ஸில் மிமிக்கிரி செய்து பல ஆண்டுகள் கடந்துள்ளேன் என்ற தகவலை பகிர்ந்தார்.உதயநிதி பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் எளிமையாக இருப்பது அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பகிர்ந்தார்.மேலும் சில சுவாரசிய நிகழ்வுகள் கலாட்டா மேடையில் நடைபெற்றன அவற்றை கீழே உள்ள லிங்கில் காணலாம்