சென்னை மெரினா கடற்கரைக்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

lockdowns

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை மெல்ல மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, திடீரென எகிற ஆரம்பித்தது. சென்னையிலும் கொரோனாவின் தாக்கம் உச்சம் பெற தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து  கடந்த ஆண்டு போல கொரோனா பாதிப்பு மிகுதியாகி விடக்கூடாது, எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று முழு முனைப்புடன் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்தது. அதனை தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, கொரோனா பாதிப்பு பரவல் வேகத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. தொடர்ந்து வெளியே நடமாடும் பொதுமக்கள் முறையாக முககவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்பது உள்ளிட்டவைகளையும் தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

மேலும் இந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்து பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக இருந்ததால், மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டதாலும், பிப்ரவரி 1-ம் தேதி முதல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள், சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.