லிஃப்டில் பெண் ஒருவர் தனியாக வந்த நிலையில், அங்கு வந்த டெலிவரி பாய் ஒருவன் திடீரென நிர்வாணமாக நின்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்களுக்கும் எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதற்கு உதாரணம் சொல்லும் வகையில் தான் சென்னை புரசைவாக்கத்தில் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அப்பார்ட்மெண்டில் 100 க்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதனால், அந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்களின் வசதிக்காக, அக்கத்தில் உள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள், டோர் டெலிவரி செய்வதற்காக, அடிக்கடி இந்த அப்பார்ட்மெண்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

அப்படிதான், அந்த அப்பார்ட்மெண்டின் அருகில் உள்ள காய்கறி கடையில் இருந்து, டெலிவரி செய்வதற்காக சென்னை சூளையைச் சேர்ந்த 24 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் வந்து உள்ளான். 

அதன்படி, அந்த அப்பார்ட்மெண்டின் 6 வது மாடியில் இருக்கும் ஒரு வீட்டில் இந்த காய்கறிகளை அந்த இளைஞன் டெலிவரி செய்ய வேண்டும்.

இதனால், அந்த டெலிவரி பாய், அந்த அப்பார்ட்டெண்டில் உள்ள லிஃப்டில் ஏறி உள்ளார். 

அப்போது, அந்த இளைஞனுடன், அந்த அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வரும் பெண் ஒருவர், அந்த லிஃப்டில் ஏறி உள்ளார்.

அதன் படி, அவர்கள் இருவர் மட்டுமே தனியாக அந்த லிஃப்டில் பயணித்து உள்ளனர். 

அந்த நேரத்தில், அந்த லிஃப்டில் அவர்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்ததால், அந்த விக்னேஷ் என்ற அந்த இளைஞன், திடீரென தனது ஆடைகளை எல்லாம் முழுவதும் கழட்டி, அந்த பெண்ணிடம் ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு கத்தவே, அங்கு இருந்தவர்கள் கூடி, அந்த இளைஞனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, அந்த இளைஞனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை புரசைவாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.