ஜெயில் நண்பனின் மனைவி மீது மோகம் கொண்ட சக ஜெயில் நண்பன் ஒருவன், பெயிலில் வந்து கள்ளக் காதல் உறவில் இருந்த நிலையில், அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 27 வயதான பழனி என்பவர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்த பழனி மீது ராஜமங்கலம், கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் சில வழக்குகள் பதியப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சென்ற நிலையில், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் பழனி, சிறையில் இருந்து வந்த நிலையில், அங்கு ஆதி, சரண்ராஜ், விக்னேஷ் உள்ளிட்ட சிலர் பழனியுடன் ஒரே வழக்கில் சிறையில் இருந்து உள்ளனர். 

இதனையடுத்து, சிறையில் இருந்த ஆட்டோ ஓட்டுநனர் பழனி, சில மாதங்களில் பெயிலில் வெளியே வந்திருக்கிறார். 

இப்படியாக சிறையில் இருந்து வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநர் பழனி, தனது சிறை கூட்டாளியானி ஒருவரின் மனைவி உடன் பேசி பழகி வந்திருக்கிறார்.

அத்துடன், அடிக்கடி சிறை கூட்டாளியின் மனைவியின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அந்த பெண்ணுடன் பழனிக்கு கள்ளக் காதல் உறவு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, சிறையில் இருந்த அவரது சக கூட்டாளியான அந்த நண்பனும் வெளியே வந்த நிலையில், மனைவியுடான கள்ளக் காதல் உறவு பற்றி அவருக்குத் தெரிய வந்திருக்கிறது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவர், தனது ஜெயில் கூட்டாளியான பழனியை அழைத்து எச்சரித்து இருக்கிறார். ஆனால், அவர் இந்த மிரட்டல் பற்றியெல்லாம் துளியும் கவலைப்பாட நிலையில், அந்த கள்ளக் காதல் உறவைத் தொடர்ந்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அவரது கூட்டாளிகள் பழனியை பல முறை எச்சரித்தும், அவர் அந்த கள்ளக் காதல் தொடர்பை விடாமல் தொடர்ந்து வந்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது கூட்டாளிகள் நேற்று இரவு கொளத்தூர் மக்காரம் தோட்டம் வழியாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அருகே பழனி சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், பழனியை வழி மறித்து சரமாரியாக வெட்டி உள்ளனர். 

இதில், தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் விழுந்த நிலையில், படும் காயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், அடுத்த சிறிது நிமிடத்தில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.