மீண்டும் இணைந்த திருமணம் ஜோடி ! வைரல் புகைப்படம்
By Aravind Selvam | Galatta | January 06, 2021 22:11 PM IST
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த தொடர். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வந்தனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றிருந்தது.
இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.
கொரோனாவை அடுத்து விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடரின் ஒளிபரப்பு அக்டோபர் 16 அன்று நிறைவுபெற்றது.தொடரை திடிரென்று எதிர்பாராமல் நிறைவு செய்ததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை பெரிதும் மிஸ் செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்த சீரியல் முதலில் இருந்து ரசிகர்களுக்காக மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.சந்தோஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.தற்போது சந்தோஷ் மற்றும் ஸ்ரேயா இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.