1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடித்து வந்த பொன்வண்ணன்,நிகிலா,ஷில்பா உள்ளிட்ட சில முக்கிய கேரக்டேர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டனர்.

ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கிறார்,நிகிலா ராவ் நடித்து  கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பல முக்கிய திருப்பங்கள் வெளிப்பட்டதாலும் சன் டிவி தங்கள் புதிய தொடர்களின் நேரங்களை அறிவித்தாலும்.இந்த தொடர் நிறைவடைய போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.இது குறித்து ரசிகர் ஒருவர் ராதிகாவிடம் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த ராதிகா, இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்றும் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்றும் தெளிவுபடுத்தினார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.