புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனைகள் விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்து உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் என்பவரின் 7 வயது மகள் ஜெயபிரியா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் தயார் மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து வந்திருக்கிறார். சிறுமி ஜெயபிரியாவின் தந்தை நாகூரான் கூலி தொழிலாளியாக அந்த பகுதியில் வேலை செய்து வரும் நிலையில், தினமும் அவர் கூலி வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இதனால், அந்த 7 வயது சிறுமி மட்டும் மன நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வீட்டில் இருப்பது வழக்கம். 

அப்போது, சிறுமியைச் சரிவரக் கவனித்துக்கொள்ள ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், தந்தை நாகூரான் வேலைக்குச் சென்ற பிறகு, சிறிது நேரம் வீட்டில் இருக்கும் சிறுமி, அதன் பிறகு சிறிது நேரத்தில் வீட்டிற்கு வெளியே வந்து விளையாடு வழக்கம். அப்படி, கடந்த ஜூன் மாதம் வீட்டின் வெளியே விளையாடும் போது, சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ வியாபரி 27 வயதான ராஜா, சிறுமிக்குத் தினமும் தின் பண்டங்கள் வாங்கி தந்து பழக்கப்படுத்தி அதன் மூலம் சிறுமியிடம் பழகி வந்திருக்கிறார். 

சிறுமியும் விபரம் தெரியாமல் ஆசைப்பட்டுக் கேட்கும் சில தின் பண்டங்களை வாங்கித் தரும்போது, அவன் சிறுமியிடம் வரம்பு மீறி பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தினமும் அதிகாலையில் வேலைக்குச் சென்று, இரவு வீடு திரும்பும் சிறுமியின் தந்தையால் தட்டி கேட்க முடியவில்லை. 

அத்துடன், வீட்டில் சும்மாவாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த ராஜா, தினமும் தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த இளைஞருக்குக் காம வெறி பிடித்துள்ளது. காம வெறியில் பொங்கித் தவித்த பூ வியாபாரி ராஜா, சிறுமி வீட்டின் சூழல் நிலை மற்றும் அவர்களின் இயலாமையை தனக்குச் சாதமாகப் பயன் படுத்திக்கொண்டு, சம்பவத்தன்று சிறுமிக்குப் பிடித்த தின் பண்டங்களை வாங்கிக்கொண்டு, சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனியாக அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகளையும் கூறி, ஏற்கனவே தான் ஆபாசப் படத்தில் பார்த்ததைப் போலவே வெறி பிடித்த மிருகம் போல், அந்த சிறுமியை உடல் முழுவதும் கடித்துக் கடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதில், சிறுமி வலியால் அழுது அடம் பிடித்துக் கூச்சலிடவே, சிறுமியின் தலையில் பலமாகத் தாக்கி உள்ளான். ஆனால், அதில் வலி தாங்க முடியாமல், அந்த சிறுமி உயிர் பயத்தில் இன்னும் உறக்க கத்தவே, என்ன செய்வது என்று தெரியாமல் அவன் விழி பிதுங்கி நின்ற நிலையில், அந்த கொடூரத்தை அவன் நிகழ்த்தி உள்ளான். 

ஆம், “சிறுமியை இப்படியே விட்டால், தன்னை பற்றிய உண்மைகளை வெளியே சொல்லி விடுவார்” என்று பயந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிறுமியின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்து, கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் அடர்ந்த குதியில் உடலை மறைத்து வைத்துவிட்டுச் சென்று விட்டான். 

அதன் பிறகு, சிறுமியைக் காணவில்லை என்று, அந்த கிராமமே தேடிய போது, கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாமல், சிறுமியின் தந்தை உடன் சேர்ந்து, இவனும் சிறுமியைத் தேடுவது போல், பாவனை காட்டி உள்ளான். இதனையடுத்து, சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது.
 
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப் படுத்திய நிலையில், ஏற்கனவே சிறுமியிடம் அந்த இளைஞன் பாலியல் ரீதியாகச் சீண்டி உள்ளதை, அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் அவனிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தான் என்பதையும் கூறி உள்ளான். மேலும், தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தின் காரணமாகவே, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததையும், அவன் ஒப்புக்கொண்டான். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவன் மீது ஆள் கடத்தல், கொலை வழக்கு, போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவனை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், கடந்த 19 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. அதன் படி, இந்த வழக்கில், நீதிபதி சத்யா தீர்ப்பை வெளியிட்டார். 

அதன்படி, ராஜாவிற்கு இரட்டை மரண தண்டனையுடன், சாட்சியை அழித்ததற்காக 7 ஆண்டுகளும், சிறுமியை கடத்தியதற்காக 7 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி கொன்றதற்காக, 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், நீதிமன்ற வழக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.