விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாகா ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சில எலிமினேஷன்களை கடந்து புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி என விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி சென்று வருகிறது.

முதல் பைனலிஸ்ட் ஆக ஸ்ருதிகா முன்னேறினார்.இதனை தொடர்ந்து இந்த வாரம் அரைஇறுதி போட்டி நடைபெற்றது.இதில் வெற்றி பெற்று அம்மு அபிராமி,வித்யூலேகா,தர்ஷன் உள்ளிட்டோர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர்.முத்துக்குமார் எலிமினேட் ஆகியுள்ளார்.பைனலிஸ்ட் ஆன நால்வருக்கும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அடுத்து நடைபெறும் வைல்ட்கார்ட் ரவுண்டில் ஒருவர் அல்லது இருவர் பைனலிஸ்ட் ஆக இணைவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.