தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார்.

இந்த முறை பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தோடு சேர்ந்து அதே தினத்தில் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் இருந்த உற்சாகத்தோடு இந்த பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக தமிழ்நாட்டில் தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு தான் அதிகத் திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பது குறித்து பேசிய வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தமிழ்நாட்டில் தளபதி விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என தெரிவித்தார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் தில் ராஜுவின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய, தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம், தளபதி விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்தது குறித்து கேட்டபோது,

“எப்போதுமே CONTENT தான் நம்பர் ஒன்! CONTENT தான் படத்திற்கு மிகவும் முக்கியம். எனவே அதுதான் நம்பர் ஒன்! ஏன் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் நன்றாக இருந்தது? அதில் நிறைய ஹீரோக்கள் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். காரணம் CONTENT. பின்னர் லவ் டுடே இப்படி நிறைய உதாரணங்கள் என்னால் கொடுக்க முடியும் எனவே எப்போதுமே CONTENT தான் நம்பர் ஒன்!!” என பதிலளித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…