நடன இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இந்தியாவின் முன்னணி நடன இயக்குனராக அவதரித்தவர் பிரபுதேவா.பின்னர் நடிகராகவும்,இயக்குனராகவும் அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் பிரபுதேவா.அடுத்ததாக பொய்க்கால் குதிரை,பிளாஷ்பேக்,ரேக்ளா,மை டியர் பூதம் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தயாரிக்கும் ரேக்ளா பபடத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தினை சிபிராஜ் நடித்த வால்டர் படத்தினை இயக்கிய அன்பு இயக்குகிறார்.

வாணி போஜன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.ரோபோ ஷங்கர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். ரேக்ளா படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

இந்த படத்தில் தற்போது ரம்,வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஹ்ரிஷிகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலை ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.