பிரபல தாயரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் எச் வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘துணிவு’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. படம் அறிவிப்பு தொடங்கி இன்று வரை துணிவு படத்திற்கு ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி படத்தின் பாடல்கள் டிரலைர் என்று அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நாளை வெளியாகவிருக்கும் துணிவு படத்திற்கு தொடர்ந்து முன்பதிவு அணைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து துணிவு குறித்த சிறப்பு காட்சிகள், விளம்பரங்கள் இணையத்தில் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாகவே துணிவு படத்தின் விளம்பர வேலை முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் வெளிவரவிருக்கும் துணிவு படத்தின் இறுதிகட்ட விளம்பர வேலை நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிலையில் துணிவு படத்தில் நடித்த நடிகர் சமுத்திரகனி துணிவு படம் குறித்தும் அதில் பணியாற்றிய அனுவபம் குறித்து நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்தார்.

அதில் பேசிய அவர், “துணிவு படம் அக்ஷன் படம் மட்டுமல்ல, குடும்பங்கள் ரசித்து பார்க்க கூடிய படம். குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம், குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம், பணம் குறித்து திட்டமிடும் குடும்ப பெண்கள், ஆண்கள் என எல்லோரும் பார்க்க வேண்டிய படம். பணம் குறித்த உங்களுக்கான சந்தேகங்களுக்கு படம் விடையளிக்கும். நிச்சயம் உளவியல் ரீதியான மாற்றத்தை படம் தரும், நல்ல செண்டிமெண்ட் காட்சிகள், நல்ல பாடல்கள், அதிரடி சண்டை காட்சிகள் என எல்லாம் சேர்ந்திருக்கும் கலவையாக துணிவு படம் உருவாகியுள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார்,  மேலும் படத்தில் அஜித் அவர்களின் கதாபாத்திரம் பெயர் என்ன என்ற கேள்விக்கு “நானும் அதைதான் தேடிக் கொண்டிருக்கிறேன்.நான் நடித்தவரை அவர் கதாபாத்திரம் பெயரை சொல்லி அழைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் உங்களுடன் சேர்ந்து நானும் இப்படத்தில் அஜித் சார் பெயர் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் இருக்கின்றேன்.  உங்களுடன் சேர்ந்து நானும் தேடுகிறேன்” என்று கூறினார்.

மற்றும் சக நடிகராக ஒரு இயக்குனராக நடிகர் அஜித் குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, “பேரன்பான மனிதர், பிரபஞ்சத்தை அதிகம் நேசிக்க கூடியவர்.எங்கேயும் ஏற்ற தாழ்வு இருக்க கூடாது என்று நினைப்பவர். அவர் நல்ல மனசுக்கு தான் அவர் இந்த இடத்தில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

துணிவு படம் முழுவதும் மக்களை கவர கூடிய படமாகவும் ரசிகர்களை குதூகலப்படுத்த கூடிய படமாகவும் இருக்கும் என்று இதுவரை வந்த செய்திகளிலும் தகவல்களிலும் தெரிகிறது நாளை வெளிவரவிருக்கும் துணிவு படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.

மேலும் துணிவு பட நடிகர் சமுத்திரகனி துணிவு படம் குறித்து பேசிய முழு வீடியோ இதோ...