கோவை மாணவியின் தற்கொலை செய்தி அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.

vaikoகோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதற்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தேடப்பட்டு வந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூருவில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டதை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் எல்லோரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. மேலும் மாணவி தம் கைப்பட எழுதி இருந்த , தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.


இந்நிலையில் தற்போது இந்தியாவிலேயே  கூடுதலாக, தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கிறது . அந்த அளவிற்கு அந்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கின்றது என்றாலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று, தெரிவித்தார். மேலும் பாலியல் கொடுமைகள் நிகழாத வண்ணம், அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு என்றும் பெற்றோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மேலும் தங்கள் பிள்ளைகள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் பெற்றோர்கள் அவர் தம் பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். மாணவி எழுதி வைத்த குறிப்பில் மேலும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். அதுகுறித்தும், காவல்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மீது நம்பிக்கை இழந்த பொன்தாரணி மண்ணுலகை விட்டு மறைந்தார், உடல் தகனம். அதன் நேரடி காட்சிகளை கீழ்க்காணும் galatta voice YouTube லிங்க்-ல் பார்க்கவும்.