கள்ளக் காதல் ஜோடிக்கு ஊரே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடும் விரக்தி அடைந்த அந்த கள்ளக் காதல் ஜோடி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் விருதுநகர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்து உள்ள பழையாபுரம் என்னும் பகுதியில் 41 வயதான பன்னீர் செல்வம் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதே போல், அங்குள்ள எம்.துரைச்சாமிபுரம் பாரைப்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர், தனது 32 வயதான மனைவி ராமலட்சுமி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு, 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும், அங்குள்ள ஒரு பள்ளியில்

இப்படியான சூழல் நிலையில் தான், 41 வயதான பன்னீர் செல்வத்துக்கும், மணிகண்டன் மனைவி 32 வயதான ராமலட்சுமிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் கள்ள காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததாகவும் கூறப்டுகிறது.

அதாவது, மணிகண்டன் மனைவி ராமலட்சுமி பாரைபட்டியில் குடியிருந்த போது,அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த பன்னீர் செல்வத்துடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் கள்ளக் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 13 நாட்கள் தலைமறைவாகி வாழ்ந்து வந்தனர்.

இதனையடுத்து, இவர்களது இரு குடும்பத்தினரும் தேடி கண்டுப்பிடித்து இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் இருவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று வழக்கம் போல் குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, ராமலட்சுமியின் கணவர் மணிகண்டன், தனது மனைவியை அங்குள்ள விளாம்பட்டிக்கு அழைத்து சென்று, குடும்பம் நடத்தி வந்தார்.

அப்போது, எம்.துரைச்சாமிபுரம் அருகே சகோதரர் ஒருவர் வீடு கட்டி வந்த நிலையில், தம்பியை பார்ப்பது போல அங்கும் அவரின் காதலன் பன்னீர் செல்வம், அவரை தேடிச் சென்று உள்ளார்.

இதனால், ராமலட்சுமிக்கும் - பன்னீர் செல்வத்துக்கும் இடையே மீண்டும் கள்ளக் காதல் தொற்றிக்கொண்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், இருவரின் கள்ளக் காதல் விசயம் மீண்டும் இருவரின் வீட்டிற்கும் தெரிந்த நிலையில், அவர்களது இரு குடும்பத்தினர் உட்பட அந்த ஊரே இவர்களது இந்த கள்ளக் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

இதனால், கள்ளக் காதல் ஜோடிகளான இருவரும் கடந்த 11 ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமாகி உள்ளனர்.

அதன் பிறகு இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் ஒரு தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து நிலையில் சடலமாக கிடந்து உள்ளனர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், தற்கொலை செய்தவர்கள் கைப்பட கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்வம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.