17 வயது கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது இளைஞன்! சென்னையில் வெறிச்செயல்..

17 வயது கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது இளைஞன்! சென்னையில் வெறிச்செயல்.. - Daily news

சென்னையில், 17 வயது கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் ஒருவன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 17 வயது மாணவி ஒருவர், பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

அதே போல், செங்குன்றம் மொண்டியம்மன் நகர் நேரு தெருவைச் சார்ந்த 18 வயதான இளைஞன் சந்தோஷ், அந்த பகுதியில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழல்நிலையில் தான், கடந்த 12 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற அந்த மாணவி, அன்று இரவு வீடு திரும்பவில்லை. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று, அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். இப்படியாக, எங்குத் தேடியும் மகள் கிடைக்காத நிலையில், “மகளை காணவில்லை” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய இந்த விசாரணையில், செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த 18 வயதான சந்தோஷ் என்ற இளைஞன், அந்த கல்லூரி மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. 

இதனை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை மீட்ட நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், “17 வயது கல்லூரி மாணவியை, 18 வயதான இளைஞன் சந்தோஷ், திருமண ஆசை காட்டி ஆந்திராவிற்கு அழைத்துச் சென்று உள்ளார்” என்பது தெரிய வந்தது. 

மேலும், காதலிப்பதாக நடித்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியை அழழைத்துச் சென்ற சந்தோஷ், இந்த மாணவியை தனக்கு தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் தங்க வைத்து, அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, செங்குன்றம் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வழக்கை மாற்றி, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக, தலைமறைவாக இருந்த சந்தோஷை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையிலான போலீசார், சந்தோஷ் மறைந்திருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment